ஜோடிப் பொருத்தம்

Thursday, December 13, 2012






நீ என்னோடு இருக்கும் பொழுதுகளில்
பட்டாம்பூச்சிகளோடு கூட்டுசேர்ந்து
பூக்களில் தேனுறிஞ்சிக் குடிக்கிறேன்

வெள்ளாட்டுக் குட்டியொன்றை
மார்போடு அணைத்துப்
புரியாத பாஷையொன்றைப்
பேசி நடக்கிறேன்

வயல்வரப்புகளில் உன் கைபிடித்தவாறே
அடிப்பிரதட்சனம் செய்ய முயல்கிறேன்

சில மழைத்துளிகளை ஏந்தி
அருந்துவதாக எண்ணி
மார்புக்குள் விட்டுக்கொள்கிறேன்

நட்சத்திரங்களை எண்ணிவிட்ட
அயர்ச்சியில் கண்ணுறங்கிப் போகிறேன்

பக்கத்தில் நீயிருக்க
மற்றதையெல்லாம் ரசிக்கும்
நான் ஒரு பைத்தியக்காரி..

மற்றதெல்லாம் பக்கமிருக்க
என்னை மட்டுமே ரசிக்கும்
நீ ஒரு பைத்தியக்காரன்…

8 உணர்வுகள்:

kamal said...

enna solradu last 2 para ..... kalakitinga subadra

Unknown said...

அன்பு சகோ உங்கள் பதிவை வலைச்சரத்தில் இன்று பெருமையுடன் அறிமுகம் செய்து இருக்கிறோம்.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி ...

நேரம் இருந்தால் இங்கே வந்து பாருங்கள் http://blogintamil.blogspot.com/2013/01/2516.html

பால கணேஷ் said...

பைத்தியக்காரன் அல்ல சுயநலக்காரன், ரசனைக்காரன் என்று தோன்றுகிறது. ரசிக்க வைத்த வரிகள். அருமையான கவிதை.

cheena (சீனா) said...

அன்பின் சுபத்ரா - கவிதை நன்று - பைத்தியக்காரி - பைத்தியக்காரன் - காரணங்கள் அருமை - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சசிகலா said...

அழகான காதலின் உணர்வை படம் பிடித்து காட்டிப்போகும் வரிகள் ரசிக்க வைத்தது இந்த பித்தும் அழகுதான்.

சுபத்ரா said...

@ கமல்
மிக்க நன்றி!

@ Ryas
மிக்க நன்றி...!

@ பால கணேஷ்
ரசிக்க வைத்த பின்னூட்டம். மிக்க நன்றி!

@ சீனா அய்யா
மிக்க நன்றி!

Gopiganesh said...

பைத்தியமாக்குகிறது இந்த கவிதை ...

கானகம் said...

//வயல்வரப்புகளில் உன் கைபிடித்தவாறே
அடிப்பிரதட்சனம் செய்ய முயல்கிறேன்// கவனித்ததை கவிதையில் சேர்த்த லாவகம் அருமை.

Powered by Blogger.