ஜோடிப் பொருத்தம்

Thursday, December 13, 2012






நீ என்னோடு இருக்கும் பொழுதுகளில்
பட்டாம்பூச்சிகளோடு கூட்டுசேர்ந்து
பூக்களில் தேனுறிஞ்சிக் குடிக்கிறேன்

வெள்ளாட்டுக் குட்டியொன்றை
மார்போடு அணைத்துப்
புரியாத பாஷையொன்றைப்
பேசி நடக்கிறேன்

வயல்வரப்புகளில் உன் கைபிடித்தவாறே
அடிப்பிரதட்சனம் செய்ய முயல்கிறேன்

சில மழைத்துளிகளை ஏந்தி
அருந்துவதாக எண்ணி
மார்புக்குள் விட்டுக்கொள்கிறேன்

நட்சத்திரங்களை எண்ணிவிட்ட
அயர்ச்சியில் கண்ணுறங்கிப் போகிறேன்

பக்கத்தில் நீயிருக்க
மற்றதையெல்லாம் ரசிக்கும்
நான் ஒரு பைத்தியக்காரி..

மற்றதெல்லாம் பக்கமிருக்க
என்னை மட்டுமே ரசிக்கும்
நீ ஒரு பைத்தியக்காரன்…
Powered by Blogger.