ஜோடிப் பொருத்தம்

Thursday, December 13, 2012






நீ என்னோடு இருக்கும் பொழுதுகளில்
பட்டாம்பூச்சிகளோடு கூட்டுசேர்ந்து
பூக்களில் தேனுறிஞ்சிக் குடிக்கிறேன்

வெள்ளாட்டுக் குட்டியொன்றை
மார்போடு அணைத்துப்
புரியாத பாஷையொன்றைப்
பேசி நடக்கிறேன்

வயல்வரப்புகளில் உன் கைபிடித்தவாறே
அடிப்பிரதட்சனம் செய்ய முயல்கிறேன்

சில மழைத்துளிகளை ஏந்தி
அருந்துவதாக எண்ணி
மார்புக்குள் விட்டுக்கொள்கிறேன்

நட்சத்திரங்களை எண்ணிவிட்ட
அயர்ச்சியில் கண்ணுறங்கிப் போகிறேன்

பக்கத்தில் நீயிருக்க
மற்றதையெல்லாம் ரசிக்கும்
நான் ஒரு பைத்தியக்காரி..

மற்றதெல்லாம் பக்கமிருக்க
என்னை மட்டுமே ரசிக்கும்
நீ ஒரு பைத்தியக்காரன்…

மகாநடிகன்

Saturday, August 4, 2012


எதையோ வெறிக்கும் உன்
ஓரப் பார்வையும்
எதற்காகவோ நீ சிந்தும்
சின்ன புன்னகையும்
யாருக்காகவோ போல் நீ
பேசும் வார்த்தைகளும்
எதேச்சையாக வந்தது போல்
நீ காட்சியளிப்பதும்
கோவிலில் நீ கொட்டிவைக்கும்
மீந்த குங்குமமும்
அவ்வப்போது
மழையாய் நனைக்கும் உன்
காதல் கவிதைகளும்
இதோ.. இப்போது..
உன் பரந்த மார்பிற்குள்
இல்லாதது போல்
நீ ஒளித்து வைத்திருக்கும்
உன் காதலும்
‘இவள் யாரென்றே தெரியாது’
எனக் கைகாட்டும்
எனக்காகத் தான் என்றறிந்தே
நானும் நடித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னைப் போலவே!

கைது

Sunday, July 29, 2012



கைகோர்த்து என்னை 
நடத்திச் செல்லும்
நொடிகளில்
உன்னுள்
கைதாகிப் போகிறேன்
நான்..!

பேரழகன்



எனக்கே எனக்கென்று
அழகான
ஓர் உலகத்தை
அறிமுகம்
செய்து வைத்த
பேரழகன் நீ!

பிரிவோம் சந்திப்போம்




“பிரிந்தால் தானே
மீண்டும் சந்திக்கலாம்” என்று
பிரிவைக் கூட
அழகாய்ச் சொல்ல
உன்னால்
மட்டுமே முடிகிறது!

பிரிவுகள்



நம் சந்திப்புகள் 
எவ்வளவு
அழகானவைகளோ..
அவ்வளவு அழவைப்பவை
நம் பிரிவுகள்..!

சொர்க்கம்



நானாக வந்து
உன்னை
அணைத்துக் கொள்ளும்
அந்நொடிகளில்
காதல் மறந்து
என்னைக் குழந்தையாக்கி
நீ கொஞ்சும் நிமிடங்கள்
சொர்க்கம்..!

முத்தம்



உன் முத்தக் கவிதைகளுக்கு
எல்லாம்
ஒரு வெட்கப் புன்னகையை
மட்டுமே
பரிசளிக்க முடிகிறது
என்னால்..!
*

காதல் திருமணம்

Tuesday, June 19, 2012


திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்..
எனக்குச்
சொர்க்கம் என்பதே
நம் திருமணத்தில் தான்
நிச்சயிக்கப்படுகிறது!

கனவுகளுடன்


கனவு கலையாமல்
உறங்குகிறாய் நீ..
உன் உறக்கம் கலைக்காமல்
உன்னுடனான கனவுகளுடன்
உறங்காமல் நான்!

நான் மட்டும்


ஒரு நிலவும்
சில நட்சத்திரங்களும்
இந்த இரவும்
உன் கவிதைகளுக்காக...
உன் காதலுக்காக?
நான் மட்டும்..
Powered by Blogger.