மகாநடிகன்

Saturday, August 4, 2012


எதையோ வெறிக்கும் உன்
ஓரப் பார்வையும்
எதற்காகவோ நீ சிந்தும்
சின்ன புன்னகையும்
யாருக்காகவோ போல் நீ
பேசும் வார்த்தைகளும்
எதேச்சையாக வந்தது போல்
நீ காட்சியளிப்பதும்
கோவிலில் நீ கொட்டிவைக்கும்
மீந்த குங்குமமும்
அவ்வப்போது
மழையாய் நனைக்கும் உன்
காதல் கவிதைகளும்
இதோ.. இப்போது..
உன் பரந்த மார்பிற்குள்
இல்லாதது போல்
நீ ஒளித்து வைத்திருக்கும்
உன் காதலும்
‘இவள் யாரென்றே தெரியாது’
எனக் கைகாட்டும்
எனக்காகத் தான் என்றறிந்தே
நானும் நடித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னைப் போலவே!

5 உணர்வுகள்:

Mohamed Ali said...

அருமை!

Mohamed Ali said...

அருமை!!!

Admin said...

கவிதை நன்று எனக்குப் பிடித்தது.தொடர்ந்தெழுத வாழ்த்துகள்..

Unknown said...

அருமையாக இருக்கு

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_26.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

Powered by Blogger.